
அமெரிக்கா.. இப்போது ராயபுரத்தில இருந்து ராமேஸ்வரம் வரைக்கும் நம்ம ஆளுங்க சொல்ற வார்த்தை இதுதான்... அமெரிக்கா போகணும்... அங்கே வேலை செய்யணும்.. நிறைய சம்பாதிக்கணும்.. அப்புறம் இங்க வந்து செட்டில் ஆகணும்... இதுதான்.. இதுதான் இன்றைய இளைஞர்களின் தேசிய வாக்கு.. அப்படி என்னதான் இருக்கோ அந்த அமெரிக்காவுல..போன மாசம் நம்ம நண்பர் பாலான்னு ஒருத்தர் அமெரிக்காவுக்கு வேலை விஷயமா போயிட்டு வந்தார்.. வந்த நாள்ல இருந்து அமெரிக்கா.. அமெரிக்கா.. டாலர்.. டாலர்... அங்கெல்லாம் அப்படி இருந்துச்சு.. இப்படி இருந்துச்சு... இதேதான் சொல்லிட்டு இருக்கார்.. அவர் மாற இன்னும் கொஞ்சம் நாள் ஆகும் போல இருக்கு.. இன்னும் சொல்லப்போனா, அவர் மாறுவதற்கு சான்ஸ் ரொம்ப கம்மி.. ஏன்னா மறுபடியும் அவர் அதே அமெரிக்கா போறார். அங்கேயே செட்டில் ஆகப் போறாராம்..அவருக்கு இந்த அமிஞ்சிக்கரை புடிக்கல, அமெரிக்காதான் புடிச்சிருக்கு... என்ன பண்றது.. நம்ம ஊரு அப்படி இருக்கு.. எங்க பாத்தாலும் pollution, traffic, crowd... இதெல்லாம் மாறுச்சுன்னா அவர் இந்தியா போல வருமான்னு சொல்லுவார்.. ஆனா அதுக்கெல்லாம் ரொம்பவே லேட் ஆகும்..
அந்த நாடுகள் மட்டும் எப்படி இவ்ளோ வளர்ந்து இருக்கு.. நம்ம நாட்டுக்கும் அமெரிக்காவுக்கும் கிட்டத்தட்ட 45 ஆண்டுகள் வளர்ச்சியில difference இருக்காம்..அப்புறம் எப்படி.. அதுக்குள்ளே நம்ம ஆளுக்கு வயசாயிடும்.. பேரன், பேத்தி எடுக்க வேண்டிய வயசுல வேலை தேட முடியாது..
யாருக்கும் தெரியாம அமெரிக்காவுல பிட்சை எடுத்தா, இந்தியாவுல வீடு வாங்கலாம்... ஆனா அதே இந்தியாவுல பிட்சை எடுத்தா அமெரிக்கா போக டிக்கெட் கூட வாங்க முடியாது... இதுதான் வாழ்க்கை..
ஆனா ஒன்னு.. இங்க திறமைய மதிக்கறது இல்ல... எங்க பாத்தாலும் பாலிடிக்ஸ். எவன் எப்போ தப்பு செய்வான்.. அவனை குனிய வெக்கலாம்னு பாக்கறதுதான் பழக்கம்.. அங்கே அதெல்லாம் கிடையாது... நீ உழைச்சா காசு... எவ்ளோ நேரம் உழைக்கரியோ அதுக்குத்தான் காசு.. உன்னோட வேலைக்குத்தான் மரியாதை.. நீ யாருன்னு எல்லாம் யாரும் பாக்கறது இல்ல... அதுதான் நம்ம ஆளுங்க ஓடறதுக்கு காரணம்...
அதேபோல, அங்க ரொம்பவே கஷ்டப்பட்டுதான் நம்ம ஆளுங்க வேலை செய்யறாங்க.. சும்மா ஒன்னும் வெள்ளைக்காரனும் தூக்கி குடுக்கல.. நம்ம ஆளுங்களோட ரத்தத்தை எல்லாம் உறிஞ்சிட்டுதான் பணம் கொடுக்கறான்.. கிட்டத்தட்ட, நம்ம ஊர்ல இருக்கற IT கம்பெனிங்க எல்லாருமே, இப்படித்தான் செய்யறாங்க.. அதே வேலைய கொஞ்சம் சொகுசா செஞ்சா அதிகமா காசு வரும்னா, யாருதான் செய்ய மாட்டாங்க.. நானே செய்வேன்... ப்ரீயா இருக்கறதாலத்தான் இதெல்லாம் எழுதிட்டு இருக்கேன்.. ஒழுங்கா இந்த வாரம் வேலை செய்யவே, எழுதக்கூட முடியல...
இதை விட கொடுமை நம்ம கால் செண்டர்ல வேலை செய்யறவங்களோட நெலமை.. எனக்கு தெரிஞ்சு சென்னைல இருக்கற ஒரு பெரிய கம்பெனில இருந்து சுமார் 150 பேர வேலைய விட்டு போன வாரம் அனுப்பிச்சாங்க.. இது ஒரு கம்பெனியோட நெலமைதான்... இது போல தெரியாம எத்தனையோ பேர daily அனுப்பிகிட்டே இருக்காங்க... அவங்களோட கதி என்ன...? போன மாசம் வரைக்கும் மாசத்துக்கு ஒரு லட்சம் சம்பளம் வாங்கனவனோட கதி???... அதோ கதிதான்!!! எப்படியும் கௌரவுத்துக்காக ஒரு கார் கண்டிப்பா வெச்சிருப்பான்.. அது நிச்சயமா லோன்லதான் இருக்கும்.. அதுக்கு due கட்ட முடியாது... வீடையும் லோன்லதான் வாங்கியிருப்பான்... IT கம்பெனின்னவுடனே பேங்குக்காரன் உடனே குடுத்திருப்பான்... அதெல்லாம் ஒரு மாசத்துக்கு சமாளிக்க முடியும்.. பிறகு, கோவிந்தாதான்...
இப்போ சத்யம் கம்பெனியால இந்திய வர்த்தகமே சரிஞ்சிருக்கு.. இதனால ஏற்பட்ட இழப்புக்கு யார் காரணம்... பங்கு வர்தகத்துல முதலீடு செஞ்சவங்களோட கதி என்ன... இன்னையவெரைக்கும் மத்திய அரசு அதுல மெத்தனம் காட்றது எதுனால..
ஒன்னும் இல்லாத விஷயத்துக்கெல்லாம் சும்மா இருக்கற CBI யை கிளறி, நீதி விசாரணை வேண்டும், CBI விசாரணை வேண்டும்னு சொல்றவங்க எல்லாம் ஏன் அமைதியா இருக்காங்க... இவங்களும் சத்யம்ல பங்க வாங்கி போட்டுட்டாங்களோ... சந்தேகமா இருக்கு...
அப்படியே ஒரு வேளை பங்கு வாங்கியிருந்தா, தயவு செஞ்சி சண்டை போட்டாவது claim பண்ணுங்களேன்... உங்களால மக்களுக்கு நன்மை கிடைச்சதுன்னு இருக்கட்டும்... மேற்கொண்டு, ஆந்திர அரசியல்ல ஏதோ பெரிசா உள்குத்து நடந்திருக்குன்னு தோனுது...
ஏன்னா இவ்ளோ நஷ்டத்துல இருக்குற ஒரு கம்பெனி, அரசாங்கத்துக்காக இலவசமா EMRI சர்விஸ் செய்ய வேண்டிய அவசியம் என்ன..? அப்போ ஆந்திர முதல்வரோட சத்யம் கூட்டு வச்சிக்கிட்டு, என்னமோ பண்ணியிருக்காங்க... நீ நெல் எடுத்துட்டு வா.. நான் உமி எடுத்துட்டு வாறன்.. ஊதி ஊதி திங்கலாம்னு ரெண்டு பேரும் நெல்லே கொண்டு வராம, ஊரான் வீட்டு நெல்ல வெச்சு வியாபாரம் பண்ணியிருக்காங்க.. எங்கேயோ எவனுக்கோ புடிக்காம போய்த்தான், இப்போ சத்யம் நிர்வாகி திரு. ராஜு மாட்டிகிட்டார்..
இதுல அவருக்கு மட்டும் பங்கு இல்ல.. அவர் கையெழுத்து மட்டும்தான் போட்டிருப்பார்... அதை கணக்கு பார்த்த ஆடிட்டிங் கம்பெனி பத்தி ஒரு வரி இல்ல... மத்தபடி கம்பெனி பங்குதாரர்கள பத்தி ஒன்னும் தகவல் இல்ல.. இது தனி ஒரு மனுஷன் செஞ்ச காரியம் இல்லை.. இதுக்கு பின்னாடி ஒரு தேசிய சதியே இருக்கு.. இதே போல எல்லாரும், தன்னோட நிர்வாகக் கணக்கை அதிகமாக்கிக் காமிச்சா என்னாகும்.. பட்டுன்னு ஒரு நாள் 5 லட்சம் கோடி, வெறும் 5 ரூபாய் ஆகிடும்.. அதை வெச்சு .................. பீடா கூட வாங்க முடியாது...



