நேற்று இலங்கைக்கும் வங்காளதேசத்துக்கும் இடையே கிரிக்கெட் போட்டி நடந்துச்சு. ஆஸ்திரேலியா தென்ஆப்ரிக்கா போட்டிய விட இது ரொம்பவே சுவாரஸ்யமா இருந்துச்சு.
இருக்காத பின்ன.. 50 ஓவர்ல வங்காள புலிகளை 152 ரன்ல சுருட்டியது இலங்கை சிங்கம்.. அஜந்தா மென்டிஸ், முரளிதரன் சுழல்லயும், குலசேகரவோட வேகத்துலேயும்..
பின்னே ஆடிய சிங்கங்கள் கதி என்ன.???
ங்கொக்க மக்க.. கொஞ்சம் miss ஆயிருந்தா.. சிங்கம் அசிங்கம் ஆயிருக்கும்..
டிவிய ஆன் பன்னி பார்த்தா 8 ஓவருக்கு scoreboard 6/5 ன்னு இருந்துச்சு.. என்னடான்னு கண்ணை கசக்கிட்டு பார்த்தா நிஜம்மாவே சிங்கம்தான் ஆடிட்டு இருக்கு... 6 ரன்னுக்கு 5 விக்கெட் காலி.சரி.. மேட்ச் முடிஞ்சது.. இனிமே இவனுங்க ஜெயிக்க மாட்டங்கன்னு நம்ம வேலைய பாக்க போயிட்டேன்.. evening வந்து பார்த்த இலங்கை ஒரு வழியா ஜெயிச்சுடானுங்க..
எப்படின்னு பார்த்தா நம்ம தமிழன், சென்னை மாப்பிள்ளை முரளிதரன் 46 வது ஓவர்ல மட்டும் திடீர்னு 20 ரன் அடிச்சு மேட்சை திருப்பிட்டார்.
கடைசியா இலங்கை சிங்கள இராணுவம் மாதிரி பரிதாபமா win பண்ணுச்சு..
என்ன இருந்தாலும் ஒரு தமிழனால்தான் வெற்றி கிடைச்சிருக்கு.. ஆனா அவுங்க நாட்டுல தமிழனைத்தான் அடி பிரிக்கறாங்க.. தமிழன் எங்க போனாலும் ஜெயிக்கறான்யா.. அங்க மட்டும்தான் முடியல.. வடிவேல் சொல்ற மாதிரி... சின்ன புள்ளத்தனமா இருக்கு..
நம்ம முதல்வர் பாவம்.. எவ்வளுவுதான் letter எழுதுவார். கண்ணீர் மடல்கள்தான் அதிகம்.. சிங்கள அரசுக்கு சிங் அரசு ரொம்பவே உதவி செய்யுது.. இதுவே சிங் அரசு ஆட்சிக்கு வந்தவுடனே நடந்திருந்தா, இந்நேரம் முதல்வர் அட்லீஸ்ட் ஆட்சிய கவுத்திருப்பார்.. முடியற டைம்தானேன்னு ரெண்டு பேரும் அலட்சியமா இருக்காங்க...what to do.. எல்லாம் அடுத்த எலெக்சனுக்கு பிளான் பண்றாங்க போலிருக்கு..
மும்பைல பாம் வெடிச்சதும், அது பாகிஸ்தானின் சதின்னு சொல்லி போருக்கே தயார் ஆயிட்டாங்க... கிரிக்கெட் விளையாட கூட நம்ம ப்லேயர்சை அனுப்பல..
ஆனா, இங்கே ஒரு ரத்த ஆறே ஓடுது... அதுல ஜாலியா விளையாட அனுப்பறாங்க... என்ன கொடுமை சார் இது....
என்னமோப்பா.. அடுத்து வரப்போற ஆட்சி யாருதா இருந்தாலும் உதை வாங்கபோறது நம்ம ஆளுங்கதான்..
பார்ப்போம்.. நடப்பது நாராயணன் செயல்.. இருப்பது ஈசன் செயல்...
சனி, 17 ஜனவரி, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக